Sunday, May 19, 2013

உடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) 

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி

( பிஸ்மில்லாஹி, அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான, வஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸக்தனா) 

என்று கூறுவாரானால் அவ்வுரவில் அவ்விருவருக்கும் குழந்தை பாக்கியம் ஏற்பட்டால் அந்தக் குழந்தை ஷைத்தான் எப்போதும் திண்ட மாட்டான்' அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி

உடலுறவுக்கு முன்பு பிஸ்மில்லாஹ் கூறுவதுடன் நபி(ஸல்) அவர்கள் கற்று தந்த இந்த துவாவை கண்டிப்பாக கூர வேண்டும். 

துவாவின் பொருள்: அல்லாஹ்வின் பெயர் கூறி (இதில் ஈடுபடுகிறேன்) இறைவா ! ஷைத்தானை விட்டும் எங்களை அகற்றிவிடு ! நீ எங்களுக்கு வழங்கக்கூடிய குழந்தையும்ஷைத்தானை விட்டும் அகற்றிவிடு! 


 சுயஇன்பம் மூலம் இச்சையைத் தனிக்கலாமா? (பாடம் இரண்டு) 

ஒரு ஆண், பெண் துணையின்றி, ஒரு பெண், ஆண் துணையின்றி வேறு வழிகளில் தங்களின் இச்சையைத் தணிக்கக் கூடாது. திருமணம் செய்ய வசதியற்ற சூழ்நிலையில் உள்ள பலர் தங்களின் இச்சைகளை தணித்துக் கொள்வதில் முயலும் வழிகளில் சுய இன்பமும் ஒன்று. 

அல்லாஹ் கூறுகிறான்: 

மேலும் அவர்கள் தங்களுடைய வெட்க தளங்களைக் காத்துக் கொள்வார்கள்' 

ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ, அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டு ) நிச்சயமாக அவர்கள் பலிவாங்கபடமாட்டார்கள். 

ஆனால், இதற்க்கு அப்பால் (வேறு வழிகளில் ) எவர் நாடுகிறாரோ, அத்தகையவர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள். (அல்குரான் : 23-5,6,7,)

திருமணம் மூலமே தவிர வேறு வழிகளில் தங்களின் இச்சைகளை தனித்துக் கொள்ள கூடாது என்றும், மீறி நடப்போர் வரம் மீறியவர்கள் என்றும் இவ்வசனம் தெளிவுபடக் கூறுகிறது எனவே சுய இன்பம் கூடவே கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். 

வாலிபர்களே ! உங்களில் எவருக்கேனும் (திருமணம் செய்ய ) வசதி இருந்தால் அவர் திருமணம் செய்யட்டும். அது (தவறான வழிகளை விட்டும் ) பார்வையைத் தடுக்கும். திருமணம் செய்ய வசதி இல்லை என்றால் அவர் நோன்பு வைக்கட்டும். அது (தவறு செய்வதில் இருந்து) அவரை தடுக்கும். 

அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊது (ரலி) நூல் : புகாரி. 

திருமணம் செய்ய வசதியற்றவர்கள் தங்கள் ஆசையை கட்டுப்படுத்த நோன்பு வைப்பது தான் சிறந்த வழி என்று நபி(ஸல்) அவர்கள் கூறுவதால் சுய இன்பம் போன்ற பழக்கத்தை எந்த ஆணும், பெண்ணும் மேற்கொள்ள கூடாது.

மனைவியின் மார்பகங்களை சுவைகலாமா? (அந்தரங்க பாடம் முன்று ) 

மார்பகங்களைச் சுவைத்தல் போன்ற காரியங்களுக்கு எவ்விதத் தடையும் இல்லை. பால் இருப்பின் அது குழந்தைக்குரிய உணவு என்பதால் அதை தவிர்த்துக் கொள்ளலாம் என்று தான் கூரமுடியுமே தவிர. ஹராம் என்று கூறிவிட முடியாது. பால் குடித்து விட்டால் உறவு மாறி விடும். குழந்தை தாய் உறவு என்றாகி விடும் என்று சிலர் கூறுவர். இது தவறு என்பதை இந்த ஹதிஸ் முலம் நாம் அறியலாம். 

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: 

பால்குடி பருவத்தில் இரைப்பையைச் சென்றடையும் விதமான பாலுட்டுதல் தவிர மற்றவை (திருமண உறவை) ஹராமாக்காது. இது பால்குடி மறக்கடிக்கப் படுவதற்கு முன்பு நிகழ வேண்டும்.

அறிவிப்பவர் : உம்மூஸாமா (ரலி) நூல்: திர்மிதி. 

மேலும் குரானின் இந்த வசனமும் இதற்க்கு சான்று 

(தலாக் சொல்லப்பட்ட மனைவியர், தம்) குழந்தைகளுக்குப் பூர்த்தியாகப் பாலூட்ட வேண்டுமென்று (தந்தை) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்; பாலூட்டும் தாய்மார்களுக்கு (ஷரீஅத்தின்) முறைப்படி உணவும், உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்; எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது தாயை அவளுடைய குழந்தையின் காரணமாகவோ. (அல்லது) தந்தையை அவன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டாது; (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அதைப் பரிபாலிப்பது வாரிசுகள் கடமையாகும்; இன்னும், (தாய் தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்துப் பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர் மீதும் குற்றமாகாது; தவிர ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால் அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை; ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும்; அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குரான் 2-233) 

மற்றும் 

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.” (அல்குரான் 31-14) 

இந்த இரண்டு வசனங்கள் படி பால்குடி வயது என்பது அதிகபட்சம் இரண்டு வருடங்கள் என்பது விளங்குகிறது. எனவே அந்த வயதுக்கு மேல் உள்ள ஒருவன் தன் மனைவியிடம் பால் குடித்துவிட்டால் மகனாகி விடுவான் என்று சொல்வது தவறு. 

தனது மனைவியின் மார்பகங்களை சுவைக்கலாம் இதற்க்கு இஸ்லாத்தில் தடை இல்லை. 

மலப்பாதையில் உடலுறவு செய்யலாமா ? ( அந்தரங்க பாடம் நான்கு )

உடலுறவு அதற்குரிய வழியில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். அதை விடுத்து மலப்பாதையில் உடலுறவு கொண்டு விட கூடாது. உடலுறவுப் பாதையை விடுத்து வேறு வழிகளில் தங்களின் இச்சையைப் பூர்த்தி செய்தல் கூடாது என்ற காரணத்திற்காகவும், 

உடலுறவின் நோக்கம் இருவரும் இன்புருவது தான்; இந்த இன்பத்தை இருவருமே ஆணுபவிக்க வேண்டும்; மலப்பாதையில் உறவு கொண்டால் பெண் இன்பம் அடையும் நிலையே ஏற்படாது. மாறான நிலையே ஏற்படும். இது கூடாது என்ற காரணத்திற்காகவும். 

உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள் ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்; (அல்குரான் 2:223 )

என்று அல்லாஹ் கூறுகிறான். விளைநிலம் என்றால் பெண்ணின் மர்மஸ்தானத்தை குறிப்பாக உடலுறவு பாதையையே குறிக்கும். காரணம் விந்தின் மூலம் குழந்தை எனும் பயனைத் தரும். விளைநிலமே மர்மஸ்தானம் என்ற காரணத்திற்காகவும் உடலுறவுக்காக மரைவுறுப்பைத் தவிர மலப்பாதையைத் தேர்ந்தெடுப்பது கூடாது என்பதை புரியலாம்.நோன்பின் இரவில்  

உடலுறவு கொள்ளலாமா ? ( பாடம் ஐந்து) 

நோன்பின் பகலில் தான் உடலுறவு கொள்ளக் கூடாதே தவிர இரவில் தாராளமாக, உடலுறவில் ஈடுபடலாம். சிலர் ரமலான் இரவிலும் கூட உடலுறவில் ஈடுபடக்கூடாது என்று கருதி ஒதுங்கியே வாழ்கின்றனர். இது முற்றிலும் தவறாகும். இரவில் உடலுறவில் ஈடுபடலாம் என்பதற்கு பின்வரும் இறைவசனம் சான்றாகும். 

அல்லாஹ் கூறுகிறான். 

நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்; அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்; எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்; இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்; இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். (அல்குரான் 2:187 )

 உடலுறவின் போது பேசலாமா? ( பாடம் ஆறு ) 

உடலுறவில் ஈடுபடும் போது பேசுவதைத் தவிர்க்க வேண்டும். பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் அதிகமாக பேச கூடாது என்று சிலர் கூறுகின்றனர். இதற்க்கு பின்வரும் செய்தியை ஆதாரமாகக் கூறுகின்றனர். 

உடலுறவு கொள்ளும் போது அதிகம் பேசாதிர்கள். பேசினால் ஊமைத் தன்மை (அல்லது) திக்கு வாய் ஏற்படும். 

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் ஹதிசை இப்னு அசாகிர் அவர்கள் பதிவு செய்து உள்ளார்கள். ஆனால்.!

இந்த ஹதீஸ் சரியான இல்லை. இதில் ஸுகைர் இப்னு முஹமது அல்குராசனி என்ற பலவீனர் இடம் பெறுகிறார். எனவே இது நபி(ஸல்) அவர்களின் பெயரால் இட்டுக் கட்டப்பட்டதாகும். 

உடலுறவின் போது பேசுபவர்களே அதிகம். பேசுபவர்கள் ஊமையாகிவிடுவர். திக்குவாய்களாகி விடுவர் என்பது உண்மையானால் ; உலகில் இன்று பலர் அந்த நிலைக்கு வந்து இருக்க வேண்டும். இப்படி ஆகவில்லை என்பதிலிருந்தே இது ஒரு இட்டுகட்டப் பட்ட செய்தியே என்பது தெளிவாகிறது.. 

எனவே உடலுறவின் போது பேசலாம். தவறு இல்லை.

 மர்மஸ்தானத்தை சுவைக்கலாமா? ( பாடம் ஏழு ) 

இது சம்மந்தமாக பல தம்பதிகளிடையே பலத்த சந்தேகம் உள்ளது. மர்மஸ்தான உறுப்புகள் அசிங்கமான உறுப்புக்கள் என்பது பலரது எண்ணம். ஆனால் அவை அசிங்கமான உறுப்புகள் அல்ல. உடலின் இதர உறுப்புக்கள் போன்று தான் மர்ம உறுப்பும். 

தல்க் இப்னு அலி(ரலி) அறிவிக்கிறார்கள் : ஒரு மனிதர் தனது மர்ம உறுப்பைத் தொட்டால் அவர் உளுச் செய்வது அவசியமா ? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதுவும் உனது உறுப்புகளில் ஒன்று தானே என நபி(ஸல்) பதில் அளித்தார்கள். (நூல் : திர்மிதி )

எனவே மர்ம உறுப்பை அசிங்கமாக கருத வேண்டியது இல்லை. கணவனும், மனைவியும் இச்சை உணர்வை அதிகபடுத்த இதர உறுப்புகளில் சரச விளையாட்டுகளில் ஈடுபடுவது போல மர்ம உறுப்பையும் பயன்படுத்துவதில் தவறில்லை. 

அதே வேலையில் உடலுறவில் ஈடுபடும் முன் இச்சையின் அறிகுறிக்கு காமநீர் வெளிப்படும் இந்த காம நீர் அசுத்தமானது என்பதை ஹதிஸ் முலம் புரிய முடிகிறது. 

அலி(ரலி) அறிவிக்கிறார்கள்: 

நான் அதிகம் மதி (காமநீர்) ஏற்படுபவனாக இருந்தேன். என்கீல் நபி(ஸல்) அவர்களின் மகளார் மனைவியாக இருந்ததால் இதுபற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்க வெட்கமுற்றேன். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்க சொல்லி இப்னு அஸ்வத்(ரலி) அவர்களை வேண்டினேன். அவர் கேட்ட போது. "உன் மர்மஸ்தானத்தை கழுவு! உலூச் செய்! என்று நபி(ஸல்) பதில் கூறினார்கள். (நூல் : புகாரி ) 

காமத்தின் சூழல் காரணமாக தம்பதியர் மர்மஸ்தானத்தை சுவைக்கும் செயலில் ஈடுபட்டாலும் காமநீர் அசுத்தமானது என்பதை புரிந்து அசுத்தத்தை உட்கொள்ளுவது சரி அல்ல என்பதையும் புரிந்து கொள்ளல் அவசியமாகும்.

 1-தல்க் இப்னு அலி(ரலி) அறிவிக்கிறார்கள் : ஒரு மனிதர் தனது மர்ம உறுப்பைத் தொட்டால் அவர் உளுச் செய்வது அவசியமா ? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதுவும் உனது உறுப்புகளில் ஒன்று தானே என நபி(ஸல்) பதில் அளித்தார்கள்

2- 'எவர் தனது மர்ம உறுப்பைத் தொட்டு விடுகிறாரோ அவர் உளூச் செய்யாமல் தொழவேண்டாம்' (உளூ செய்து தொழுது கொள்ளட்டும்) என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: புஸ்ரா பின்த் ஸஃப்வான் (ரலி).நூல்கள்-தப்ரானி மற்றும் தாரகுத்னி.

மேலே உள்ள முதல் ஹதீஸ், அஹ்மத், அபூதாவூத், நஸாயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா. இரண்டாவது ஹதிஸ் திர்மிதீ மற்றும் இப்னு ஹிப்பானில் 'ஸஹீஹ்' எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்டுள்ள இரு ஹதீஸ்கள், இரு முரண்பட்ட கருத்துக்களை முன்வைத்துள்ளது. அவ்விரண்டும் நிராகரிக்க முடியாத 'ஸஹீஹ்' தரத்திலும், ஆதாரபூர்வமான ஹதீஸாகவும் உள்ளது. இதனை இணைத்து நாம் ஒரு முடிவு செய்யவேண்டும். 
நபி (ஸல்) அவர்களின் கூறியதிலிருந்து 'அதுவும் உமது உறுப்புதானே' என்றதன் கருத்து, ஒருவர் தனது பிறப்புறுப்பை (மர்மஸ்தானத்தை) தற்செயலாக தொட்டாலோ அல்லது அவைகளின் தனித்தன்மையை அறியாது தொட்டாலோ உளூ நீங்காது. பிறப்புறுப்பின் தனித்தன்மையை அறிந்து ஒரு நோக்கத்துடன் (இச்;சையுடன்) தொடுவாராயின் உளூ நீங்கும் என முடிவு செய்யவேண்டும்.
இப்படியும் விளங்கலாம், முதல் ஹதீஸ் நோக்கமின்றி (இச்சையின்றி) மற்ற உறுப்புக்களை தொடுவது போல் தொடுவதால் உளூ நீங்காது எனவும், இரண்டாவது ஹதீஸ் இச்சையுடன் (நோக்கத்துடன்) அதனை தொடுவதால் உளூ நீங்கி விடுகிறது மீண்டும் தொழுகைக்காக உளூ செய்தல் அவசியமாகின்றது. இப்படி எடுத்துக்கொண்டால் முரண்பாடின்றி விளங்கிக்கொள்ளலாம். (அல்லாஹ் மிக்க அறிந்தவன்)

 ஓரினச் சேர்க்கை மூலம் இசையைத் தீர்கலாமா? ( பாடம் எட்டு ) 

ஆணுடன் ஆணும, பெண்ணுடன் பெண்ணும் இணைந்து தங்களின் இச்சையைத் தீர்ப்பது என்பது கூடாது. ஆணுடன் ஆண் - அதாவது ஒரு ஆண் மற்றொரு ஆணுடன் உறவு கொண்டு வாழ்வது சில நாடுகளில் பரவலாக நடைபெற்று வருகிறது இதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. 

அல்லாஹ் திருமறையில் கூறுகிறான். 

மேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்;) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவா முனைந்தீர்கள்?”“மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள் - நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்.” (அல்குரான் : 7:80-81) 

இன்னும் நாம் அவர்கள் மீது (கல்) மாரியைப் பொழியச் செய்(து அவர்களை அழித்)தோம், ஆகவே, குற்றவாளிகளின் இறுதி முடிவு என்ன ஆயிற்று என்று (நபியே!) நீர் நோக்குவீராக.(அல்குரான் : 7:84 ) 

எனவே (தண்டனை பற்றிய) நம் கட்டளை வந்துவிட்டபோது, நாம் (அவ்வூரின்) அதன் மேல்தட்டைக் கீழ்தட்டாக்கி விட்டோம்; இன்னும் அதன்மீது சுடப்பட்ட செங்கற்களை மழைபோல் பொழியவைத்தோம்.அக்கற்கள் உம் இறைவனிடமிருந்து அடையாளம் இடப்பட்டிருந்தன; (அவ்வூர்) இந்த அநியாயக்காரர்களுக்கு வெகு தொலைவிலும் இல்லை. (அல்குரான் : 11:82- 83 ) 

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: 

"ஒரு ஆண் மற்றொரு ஆணின் மறைவிடத்தைப் பார்க்கக் கூடாது. ஒரு பெண் மற்றொரு பெண்ணின் மறைவிடத்தைப் பார்க்கக் கூடாது. ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் ஒரே ஆடையில் (நிர்வாணமாக) கட்டி அணைத்தல் கூடாது" (நூல்: முஸ்லிம்) 

லூத் நபி(ஸல்) அவர்களின் மக்கள் செய்த செயலை எவரேனும் செய்யக்கண்டால் (அந்த செயலை) செய்தவனையும், செய்யப்பட்டவனையும் கொலை செய்து விடுங்கள். ( அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : அஹ்மத்) 

ஓரினச் சேர்க்கை கூடாது என்றும், அதை செய்வோரை கொலை செய்து விட வேண்டும் என்றும் இஸ்லாம் கூறுவதால் இதுபோன்ற வழிகளில் தங்களின் இச்சையை எந்த ஆணும. பெண்ணும் தணிக்க கூடாது.

இன்ஷாஅல்லாஹ் தொடரும் :-

No comments:

Post a Comment